இந்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இந்தப் படத்தை எடுத்தபோது தான் பெரும் அச்சமடைந்ததாகவும், தடுமாற்றத்தில் தனது கமரா கூட உடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கமரா உடைந்தபோதும் அதிலிருந்த மெமரி கார்ட்டுக்கு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுப்பர்மேன் போல் காட்சியளித்த இந்த உருவம் காட்டுக்குள் மறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் காட்சியை இந்த இணையத்தளத்தில் பார்த்த பலரும் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு இணையத்தள விளையாட்டில் இந்த உருவம் காணப்படுவதாக ஒருவர் தெளிவாகக் கூறியுள்ளார்.