தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

true friendship ,உண்மையான நண்பர்கள்

உலகத்தில் எத்தனையோ ‌ ஜீவராசிகள் உயிர் வாழுகின்றன அவற்றின் ஒவ்வொறு ஜீவராசிகளுக்கும்  ஒவ்வொறு இயல்பை கடவுள் படைத்துள்ளான்  
அந்த ஜீவராசிகளில்  ஒன்றுதான் எங்களுடைய நட்பு  காலத்தால் அழியாத சுவடுகள் என்றுதான் எங்களுடைய நட்பை சொல்ல வேண்டும். வெறுமனே நட்பெனும் போர்வைக்குல் புகுந்து  ஊரையும்,மானத்தையும் ஏமாற்றும் இவ்வுலகத்தில் எங்களுடைய நட்பு   இவ்வுலகத்திற்கு எடுத்துகாட்டான புனிதமான நட்பெனும்  சூவாலையைதான் வீசிக்கொண்டு இருந்தன.....

           பல கெட்ட,நயவஞ்ஞககாரர்கள் எங்களுடைய நட்பை கொஞ்சைப்படுத்தியும், பிரிக்கவும் பார்த்த காலத்தை நினைக்கும் போது என் மனதில் பெரிய பூகம்பம் வெடித்து சிதறுவதை போல் என்னால் ஊகிக்கமுடிகின்றது. நாங்கள் சேர்ந்து செல்லுகின்ற பாதை வழியெல்லாம் நண்பர்கள் சிலர் ஏன் வயது வந்தவர்கள் கூட தப்பான கண்னோட்டத்தினிலே எங்களை பார்த்தார்கள் எங்களை பற்றி விமர்சிப்பார்கள் எங்களின் மனம் நோகும்படி  புறம்சொல்வார்கள். எங்களுடைய நட்பு எதையும் கண்டுகொள்ளாது தனது ஓரே பாதையில் சென்றதை நினைக்கும் போது இன்னும் என் மனதை பசுமைப்படுத்துகின்றது.

எங்களுடைய நட்பு இவ் பாமர மக்களின் சூதாட்டத்தினால் மேலும் உயிர்பெற்றது எந்த தடைகள் வந்தாலும் எதர்க்கும் அஞ்ஞாமல் வீருநடை போட்டது. எனது நட்பிற்கு அத்திவாரம் என்று போடப்பட்டதோ அன்றில் இருந்து எனது வாழ்க்கையில் பல மாற்றத்தினை தெளிவுப்படுத்திக்கொண்டேன் மனிதனுடைய வாழ்க்கை அரசியல் அறிஞர் அரிஸ் டோட்டில் குறிபிட்டது போல  காட்டுமிறாண்டிதனத்தை விட்டு நல்ல பல பண்புகளை என் நட்பிடம் பெற்றேன்.

அதன்மூலம் சென்றஇடமெல்லாம் வெற்றியும்,சிறப்பும் கிடைத்தது  எங்களுடைய நட்பில் மிகவும் பிடித்தமான பல விடையங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உணவை பரிமாரிக்கொள்வது இந்த சந்தர்பம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்போடு ஏங்கிய காலப்பகுதியும் என்னுல் உண்டு.

இவ்வாறு பல காலமாக எங்களுடைய நட்பு உருண்டுஓடியது  ஒருநாள்  என்னுடைய மாமன் மகளுடன் காதல் வயப்பட நானும் என்காதலை வெளிப்படுத்த காதல் ஓருபக்கம் நட்பு ஒருபக்கம் என்னுடைய வாழ்ககையின் சந்தோஷத்தை கொடுத்தது.

இவ்வாறு எனது நட்பு செல்லுகின்றப்போது  பொறுக்கமுடியாத எமது சமூக பாமர மக்களும் சில நயவஞ்ஞக நண்பர்கூட்டமும்  எனது நட்புக்கு எனது காதலை துரும்புசீட்டாக வைத்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள். காலம் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பெற்றோர் என்னை  துயரப்படுத்தவில்லை என் நட்பின் பெற்றோரும் என்னை துயரப்படுத்தவில்லை  ஊர் பலதும் சொல்லும் அதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்னக்கருவை விட்டு அகலாமல் செவ்வனே இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது எனது காதலுக்கு வந்த பெரிய இடைவெளியை கண்டு என் நட்பு என்னை விட்டு பிரிய நேரிட்டது. அந்த பிரிவைதான் என்னால் ஈடுசெய்யமுடியாமல் வேதனையில் தவித்துக்கொண்டு இருக்கின்றேன். இன்பத்திலும் துன்பத்திலும் நட்பு கூடவே இருக்கவேண்டும் என்பார்கள்  ஆனால்  என் நட்பின் திருமணத்திற்கு கூட செல்லாத வக்கத்தவனாக நான் இருந்தேன்.....

வாசகர்களே இவ்வளவு நேரம் நீங்கள் வாசித்ததில் கொடுக்கப்பட் விடயத்தில் நட்பு என்ற வார்த்தையைதான் உபயோகித்தேன் அந்த நட்பானது ஆணா அல்லது பெண்ணா என்ற  கேள்விக்கு இப்பொழுது விடை தெரிந்திருக்கும் என நான் நம்புகின்றேன். நட்பால் பிண்ணப்பட்டது ஒரு பெண்ணிடம்தான் அதனால் தான் சமூகம் எங்களை உதாசீனம் பன்னியதுமட்டுமல்லாது எங்களுடைய நட்பையும் பிரித்தது.

அன்பின் நண்பர்களே தயவு செய்து நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது ஆண் நண்பர்களை தேர்ந்தெடுங்கள் ஏன் என்றால் நாம் சமூகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் கட்டாயத்தினில் உள்ளோம்.
எது எப்படி இருந்தாலும் என்றும் என் நட்பு என்மனதை விட்டு நீங்காது  என்றும் அழியாது.  

my best and first friend kala
எனக்காக கொஞ்ஞம் நேரத்தை ஒதுக்கி வாசித்தமைக்கு நன்றிதனை கூற கடமைப்பட்டுள்ளேன்.
என்றும்
அன்பின்
சுபாஷ்





நாட்டின் பல பாகங்களிளும் மர்ம மனிதர்கள்

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில்  வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி மற்றும்  உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது கூறமுடியாவிட்டாலும் இதில் ஒரு நன்மையையும் இருக்கிறது. சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன் பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம், புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும்  பேசப்படுகின்றது .

மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, டிக்கோயா,  பூண்டுலோயா , மடகுபுர,லபுக்கலை,பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண், பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தளத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார்கள்.

இவ்வாறு திரும்பி வந்த தொழிலாளர்கள் குழந்தை காப்பகத்திலிருந்தும், முன்பள்ளிகளிலிருந்தும் தமது பிள்ளைகளை தூக்கிக்கொண்டு பயந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.


அதே  வேலை லிந்துலை தலவாக்கலை டயகம தோட்டங்களின் வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை தூக்கிச்சென்று முடிகளை வெட்டி கொண்டிருக்கும் சந்தர்பங்களில் மக்களின்  நடமாட்டத்தை கண்டு ஓடியுள்ளதையும் பிறகு அவர்களை பிடிக்கமுடியாமல் போய்விட்டதாகவும் பிரதேச வாசிகள்  கூறுகின்றனர்.


அதே வேலை பூண்டுலோயா பிரதேசத்தின் சீன் தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று தொண்டைப்பகுதியை காயப்படுத்தி உள்ளதையும் எம்மால் ‌அவதானிக்க முடிந்தது

இதற்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் எதிர் வரும் தினங்களில் சுடசுட தர காத்திருக்கின்றேன்.


மைக்ரோ சாப்டுவேர் பில்கேட்ஸ் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி. யாவரும் தெரிந்து இருக்கலாம். அல்லது அது கண்ணில் படாமல் போய் இருக்கலாம். ஆனால் என்னுள் அந்த விதைகள் ஊறிக்கொண்டே இருக்கின்றன. என்னை எழுதச் சொல்லி நெருடிக் கொண்டே இருக்கின்றன.எப்படி அன்னை தெரஸா தனது சிறு வயதிலேயே இந்தியா சென்று மீச்சிறு மானிடங்களுக்கு தனது ஆயுளை அர்ப்பணிக்க வேண்டும் என்று கனவு கண்டாரோ அப்படி எல்லாம் இல்லாமல் ஆனால் அவருக்கு இணையான சாதனையை பில்கேட்ஸ் குடும்பமும் செய்து வருவது மனித குலம் யாவராலும் பாரட்டப்பட வேண்டியது.
நான் சொல்வது அவரின் கணினி உலக சாதனையைப் பற்றியோ அவரின்  உலகின் முதல் பணக்காரர் என்பது பற்றியோ அல்ல. அதைபற்றி எல்லாம் நிறைய எல்லாம் செய்திகள் வருவது அனைவரும்  அறிந்ததே.அவர் ஆல்பிரட் நோபெல் மாதிரி தனது சம்பாதனை எல்லாம் இம் மனித குலத்திற்கு பெரிதும் பயன்படவேண்டும் என்று செய்து வரும் சாதனை பற்றியதே.
பகவத் கீதையில் சொல்வது மாதிரி”எல்லாம் நமக்கு உலகிலிருந்தே கிடைத்தது; கிடைத்ததை உலக மேன்மைக்கே-நன்மைக்கே செலவு செய்து செல்வோம்” என்ற சிந்தனையில் தனது 34பில்லியன் வருமானத்திலிருந்து இதுவரை சுமார் 18 பில்லியன் இவ் உலகின் ஏழைக்குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக தடுப்பு மருந்து கொடுக்கும் பணியில் செலவிட்டு இருப்பதாகவும் அதன் மூலம்  இதுவரை சுமார் 250 மில்லியன் குழந்தைகளுக்கு பயன்பட்டு உயிர் பிழைத்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.அதுவும் முற்றிலும் இந்தியா ; ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே அதிக கவனம் எடுப்பதாக சொல்லியுள்ளது நமக்கெல்லாம் ஆச்சரியமூட்டும் செய்தி.
ஒபாமா நமது நாட்டையும் காந்தியையும் நேசிப்பதாக சொல்லியபோதும் தனது நாட்டை வலுப்படுத்த இந்திய நாட்டின் இளஞர்க்கு வேலை வாய்ப்பில் கல்தா கொடுத்து புளியைக் கரைத்து  வரும்பொது பில்கேட்ஸின் நடவடிக்கை நமது நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.உலகின்1960 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் குழந்தைகள் சரியான தடுப்பு மருந்தின்றியும்; ஊட்டச்சத்தின்றியும் பிறந்த குறைந்த பட்ச காலத்திலேயே இறந்து வருவதை தற்போது ஏறத்தாழ தனது உபகாரத்தின் மூலம் 8- 9 மில்லியன் குழந்தை இறப்பாக குறைத்து வருவது சாதனை இல்லையா.சுமார் 11 மில்லியன் அதாவது நமது இந்தியக் கணக்கில் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி குழந்தைகளின் இறப்பை தடுத்து வருகிறார் என்பதை சாதாரணமாகக் கருத வழியில்லை.
ஒபாமாவுக்கு கொடுத்த நொபெல் பரிசை உண்மையில் இவருக்குத்தான் கொடுத்திருக்கவேண்டும். அடுத்து அதைவிட முக்யமானது: மிக்க புகழ் உள்ளவர் யாவரும் ஒன்று பிள்ளை இல்லாதவராக அல்லது பெண்பிள்ளைகள் உடையவராக-ஆண் வாரிசு இல்லாதவராகவெ இருப்பதை பார்க்கலாம். நானறிந்த சிலரை எடுத்துக்காட்டாக இங்கு: எம்.ஜி.ஆர்-பிள்ளை இல்லை. ரஜினி- 2ம் பெண்களே. கமல்- 2ம் பெண்கள், கலாம்,வாஜ்பாய்- திருமணமே இல்லை.ஒபாமா- 2ம் பெண்கள்; பெரியார்-குழந்தை இல்லை. காமராஜ்-திருமணமே இல்லை. இன்னும் சொல்லலாம்.
ஆனால் பில்கேட்ஸிக்கு ஆணும் பெண்ணுமாய் 3 குழந்தைகள் . ஆனால் இவரும் இவர் மனைவி-மெலிண்டாவும் தனது பிள்ளைகளுக்கு பெரும்பகுதி செல்வத்தில் பங்கு இல்லை. அவர்களுக்கு வாழ்க்கைகு வசதிக்கு கொஞ்சம் ஒதுக்கிவிட்டு; தனது செல்வத்தின் பெரும்பகுதியை இது போன்ற தர்ம சாதனைக்கே உலகில் இந்தியா; ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு செலவிட உதவுவதாக சொல்லியிருப்பது பற்றி பாராட்ட வார்த்தை இல்லை.
இவர்களைப் பின்பற்றி உலகில் உள்ள தலைசிறந்த பணக்காரர் எல்லாம் மாறினால் உலகு எப்படி இருக்கும்? மனிதகுலம் ஒரு குறைவின்றியும் இருக்குமே என்று கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவோ உள்ளம் மகிழ்வடைகிறதே.

சிரிக்கின்ற பெண்களை பற்றி

அதிகமாக சிரிக்கின்ற பெண்களை நம்பாதிங்க என்று சொல்வார்கள்.......!

அது எல்லாமே கட்டு கதைகள் முதல்ல கட்டுகதைய நம்ப  கூடாதுங்க..........!

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமுனு சொல்லுராங்களே.....!

அப்படியானால் அதிகமாக சிரிக்கின்ற பெண்களுக்கு நோய் குறைவுதானே........!

அப்படியான பெண்களை காதலித்தாளோ,கள்யாணம் பன்னிக்கிட்டாளோ ......!

நமக்கு தானேங்க நல்லது .........நல்லது........ நல்லது..........!

என்னுடைய கருத்துங்க
அன்பின்
சுபாஷ்

இதுதானா 5sமுறை !

5s  முறை என்கின்றப்போது
 
sort----------------ஒழுங்கு 
stabilize---------நேர்த்தி
shine-------------தூய்மை
standardize----நியமம்
sustain---------முன்னெடுப்பு


கட்டம் - 1 (SEIRI)
விளங்கிக் கொள்வோம்,தேர்ந்தெடுப்போம்,தெரிந்தவற்றைத் தெரிவிப்போம்.
  • எத்தேவையும் அற்றவற்றை ஒரு இடத்தில் கோவைப்படுத்துவோம். பின்னர் அவற்றை அப்புறப்படுத்துவோம்.
  •  தற்போது அவசியமற்றதெனினும் சில வேளைகளில் பின்னர் தேவைப்படும் என கருதப்படுபவற்றை வேறாக்குவோம்.
  •  தினமம் முடியாவிட்டாலும் வருடத்திற்கொருமுறை, ஆறு மாததிற்கொருமுறையோ அல்லது 3 மாதத்திற்கொரு முறையோ தேவையானவற்றை வேறாக வைப்போம்.
  •  எப்போதும் தேவையானவற்றை மாத்திரம் (கை) அருகில் வைத்திருப்போம்.
  •  எம்மைச் சூழவுள்ள  யாவற்றையும் வகைப்படுத்துவோம்.
  •  எப்போதும் தேவையானவை மற்றும் தேவையற்றவைகளை வேறாக்கி வைத்திருப்போம்.
  •  விற்று பணமாக்க முடியாத காலாவதியான மற்றும் மெதுவாக செயல்படுகின்ற பொருட்கள் யாவற்றையும் அப்புறப்படுத்துவோம். சில நேரங்களில் தேவைப்படுபவை, சில வேலைகளில் தேவையாகும் எனக் கருதி வைத்திருப்பவை என தேவையானவற்றை வேறாக்குவோம்.
  •  சேரும் தேவையற்றவற்றை கிரமமாக அகற்றுவோம்.
  •  தேவையற்றவற்றை சேகரிக்க  இடத்தை ஒதுக்காது உடன் அவற்றை அகற்றுவோம். 

கட்டம் - 2 (SEITON)
உபகரணங்கள் - பற்றி ,ஒழுங்காக,முறையாக
  • மது அலுவலகத்தில், வேலைத்தளத்தில் உள்ள சகல கிளைகள், அறைகளுக்கும் இலக்கமிடவும், அலுமாரி,கபோட்,போன்றவற்றை இடத்துக்ககிடம் வைக்காது முறையாக வரிசையாக வைக்கவும். அந்த இடங்களுக்கு நல்ல வெளிச்சம்,காற்றோட்டம் கிடைக்கின்றதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  •  திசைகளைக் குறிக்கும் பெயர் பலகைகள் (Direction Boards) ஐ பொதுவான இடத்தில் பொருத்துவோம்.
  •  அலுமாரி,கபோட் போன்றவற்றின் உள்ளேயுள்ளவற்றைப் பற்றி சுருக்கமான பட்டியல் ஒன்றை அவற்றின் வெளிப்புறமாக ஒட்டவும் நன்றாக தெரியும் படி பெரிய எழுத்துக்களை பாவித்து லேபல் முறையில் யாவற்றுக்கும் பின்பற்றவும்.
  • இலகுவாக அறிந்து கொள்வதற்காக சகல கோவைகள், பெயர்ப்பட்டியல், உறைகள் என்பவற்றை வெவ்வேறு நிறங்களில் தயாரிப்போம். சாவி, பூட்டு ,பூட்டுச்சாவி ஆகியவற்றுக்கு நிறம் பூசும் முறையை பயன்படுத்துவோம்.
  • சகல விண்ணப்பப்படிவங்களையும் தனியான இடத்தில் சேகரிப்போம். அது திறந்த இடமாக இருந்தால் மிகவும் இலகுவாகும்.
  • மரத்தளபாடங்கள், படங்கள், அறிவித்தல்கள் ஆகியவற்றை ஒழுங்காக முறையாக வரிசையாக வைக்கவும்.பொயர் பட்டியல் முறையை பின்பற்றுவதன் மூலம் தேவையான இடத்தை மிகவும் இலகுவாக அடையாளம் காண முடியும்.
  • கலஞ்சியசாலையில்,அலுவலகத்தில் இருக்கும் சகலவற்றையும் கிரமமாக வரிசைப்படுத்தி வைப்போம்.
  • அபாயகர இடங்களுக்கு அதற்கான பெயர் பலகையை பொருத்துவோம்.
  • சகல சாவிகள்,குப்பை தொட்டி, வாகனங்கள், காகித தாள்கள், புத்தகங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்காக வெவ்வேறான இடங்களைத் அமைத்து அவற்றை குறித்த இடங்களிலே வைப்போம்.
  • மீண்டும் ஆற்ற வேண்டிய வேலைகளை வேறாக வைப்போம்.
கட்டம் -3 (SEISO)
எல்லா இடங்களிலும் எல்லா வேலைகளிலும் பரிசுத்தத்தை - அனைவரும் சிந்திப்போம்.
  • வேறு ஒருவரினால் செய்யப்படும்வரை இருக்காமல்,நாமே நமது சூழலை சுத்தப்படுத்துவோம்.
  • எமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை மனதில் கொள்ளுவோம். உதாரணமாக தொலைபேசியைப்  பாவித்ததன் பின் அதைச் சுத்தம் செய்ய பழகிக் கொள்வோம்.
  • சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் எமது  கடமையாகும் எனக் கருதி தினமும் செயற்படுவோம்.
  •  சுத்தம் செய்யும் செயற்பாடுகளுக்கு முகாமைத்துவத்தின் சகல அலுவலர்களும் பங்கு கொள்வதுடன் கிரமமாக அது எமது பிரிவில் செயற்படுகிறதென திருப்திப்பட வேண்டும். முகாமைத்துவத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்களும் இதற்காக பங்களிப்பதுடன் முன்மாதிரியை பெற்றுக்கொடுக்க  வேண்டும்.
  • பாவனைக்குதவாவற்றை அதற்கான தொட்யில் மட்டும் போடுவோம்.
  • தூசு,குப்பை போன்றவை உள்வரும் வழிகளை இனங்காணுவோம். அவ்வாறான வழிகளை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.அதன் ஊடாக சுத்தம் செய்யும் முறையை மிகவும் இலகுவாக ஆற்றலாம் என புரிவோம்.
கட்டம் - 4 (SEIKETSU)
எமது சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை முறையாகவும், சுத்தமாகவும் பேணும்போது,வேலை செய்யும் எந்த நேரமும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
  • பொருட்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைக்கேற்ப தயாரிக்கப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்போம்.
  • பெருமதிக்கேற்ப அலுவலகத்தின் ஒவ்வொறு பகுதியையும் வகைப்படுத்துவோம். 
  •  சகல   5sசெயற்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தினடிப்படையில் செயற்படுத்துவோம்.
  •  ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகளுக்கேற்பவும்,வடிவங்களுக்கேற்பவும் பொருட்களைத் தரப்படுத்துவோம்.
  •  பல்வேறு இடங்களிலும் ஓரே செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் பொருட்கள்,உபகரணங்கள் என்பவற்றை ஓரே தரத்தினதாகும்( ஓரே பரிமானம்,ஓரே அளவு, ஓரே நிறத்தில்.) தயாரிப்போம். (உதாரணமாக: மேசை,கதிரை, அலுமாரி, கபோட்,திரைச்சீலை,கழிவுபோடும் கூடை) 
  • சகல முறையையும் தரப்படுத்துவோம்.
  • குழாய், பூட்டு  போன்றவற்றை வேறுவேறாக இனங்காண்பதற்காக நிறமுறைமையை பின்பற்றுவோம்.
  • ஒவ்வொறு பொருளிளதும் ,உபகரணத்தினதும் நடாத்து முறையைச் சேர்த்துக்கொள்வோம். தூர நோக்கு நிருவாக முறையைச் சேர்ப்போம்.
  • எப்போதும் பரிசோதிப்பதற்கான பட்டியலை தயார் செய்து, அந்தப் பட்டியலின்படி பரிசோதனை செய்ய பழகுவோம்.
கட்டம் -5 (SHITSUKE)
பயிற்சியும் ஒழுக்க நெறிக் கல்வியும் 
  • 5s இன் மகிமையை யாவருக்கும் சொல்லிக் கொடுப்போம்.
  • 5s முறைக்குரிய புபை்படங்களை யாவருக்கும் தெரியும்படி வைத்திருப்போம்.
  • 5s உற்சாகமளிக்கக் கூடிய சொற்களை முன்மொழிதல், போஸ்டர், நாடகப்போட்டி ,வீதிநாடகங்கள், போன்றவற்றை ஏற்பாடு செய்தல்.
  • 5s பற்றி நியம மதீப்பீட்டைக் கிரமமாக செயற்படுத்தல்.
  •  யாவரும் பங்குகொள்ளக்  கூடியவகையில் தயாரிக்கப்பட்ட 5s கலாசாரத்தை நிறுவனத்துள் ஏற்படுத்தல்
  •  நிறுவனத்தில் ஒவ்வொறு பிரிவுகளுக்கிடையில்  5s போட்டிகளை நடாத்துவதன் மூலம் அதற்காகவுள்ள கருத்தை அதிகரித்தல்.
  • 5s  முறை எப்போதும் செய்ய வேண்டிய வெலை என ஆக்கிக்கொண்டால் எல்லாமே நேர்த்தியாக பேணப்படும் என்பதில் எவ்வித ‌ஐய்யபாடும் இல்லை என்பதனை நானாகிய சுபாஷ் உங்களுக்கு அன்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.    

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொறு தாய் தகப்பனின் எண்ணமும் எமது குடும்பம் அமைதியானது ஒற்றுமைமிக்கது குடும்பங்களோடு இணைந்து வாழ்வோம் என்று இருக்க வேண்டும். இதை எப்படி உருவாக்குவது 

  • குடும்பத்தில் ஒரு வேளையாவது அனைத்து உறுப்பினர்களும் கலந்து உண்ண வேண்டும்.  உண்ண வேண்டம்.  உண்ணும் போது  டிவி பார்த்தல் வேண்டாம் சேர்ந்து  உண்ணும் குடும்பங்கள் இணைந்து வாழ்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் போது அன்புப் பிணைப்பு உருவாகிறது.
  • குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர ‌ வேண்டும்  முக்கியமாக பூங்கா, மலைப்பகுதிகள், கோயில்கள், இன்னிசை கச்சேரிகள், நூலகங்கள், போன்ற பல இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர வேனுங்க
  • அத்தோடு குடும்பத்தின் ஒருவருடைய வெற்றியை எல்லோரும் கொண்டாட வேணுங்க வாழ்த்துக்களையும் பரிமாற வேணுங்க
  •  ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனிதனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க  வேணுங்க அத்தோடு விட்டுவிடாமல் மீண்டம் வெற்றி பெற உற்சாகம் ஊட்டவேண்டும். 
  • முக்கிய மான தினங்களில் பெருநாட்களின்போது எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட மறந்து விடாதிங்க.
  • உறவில் “தான்” என்ற ஈகோ வேண்டாம். போலிக் கௌரவம். மானம், ரோஷம் குடும்பத்தில் வேண்டாங்க மனம் விட்டு பேசித்  பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்க
  • குடும்பத்துடன்  இணைந்து இறைவழிப்பாடு தியானம் செய்யுங்கள்
    இவை அனைத்தும் குடும்ப வாழ்வில் தினமும் கடைப்பிடித்தால் வாழ்வில் அமைதி நிலைத்திருக்கும்
    வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும் அதில் இன்பம் துன்பம் சேர்ந்து இருக்கும்
 

இப்படியும் சில மலர்களா?

இந்த மலர்களை நான் இதுவரை கண்டதில்லை…..நீங்கள்?
f1
f6
f3
f5
f4
f2

பூக்கள் குறித்த சில தகவல்கள் (படித்து சுவைத்தவை)

பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்" க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில அகராதி.


இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.


கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.


இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.


இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.


எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச் சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால் கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.


காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் கிடையாதாம்.


பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.


மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.


காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படுகிறது.


பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.


குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கின்றன.


பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எனது அன்பு உள்ளங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQscb0Vg282bGSm2zuw5xyEdY-1871KnTy2QudEg7gZEihH9xb2







எனது  அன்பு உள்ளங்களுக்கு இனிய  பொங்கள் வாழ்த்துக்கள்  பானையில் பொங்குவது பொங்கள் அல்ல உங்கள் மனதில் எழும் எண்ணம்.
வாயார வாழ்த்தும் வாழ்த்து
வாழ்க






Share |




Get Live Score